முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பசுமை தாயகத்தின் கருத்தரங்கம்

    ஒசூர்: ஓசூர் தனியார் பள்ளியில் பசுமைதாயகம் சார்பில் காலநிலை அவசரநிலை அறிவிக்க வலியுறுத்தி கருத்தரங்கம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், பசுமைத்தாயகம் சார்பில் காலநிலை அவசர நிலை பிரகடனம் குறித்து கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகத்தின் செயலாளர் அருள் மற்றும் சிறப்பு ஆலோசகர் வினோபா பூபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதை கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய

    READ MORE
  • பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்

    புதுடெல்லி: பாலில் நச்சுத்தன்மை உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது. தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளது. நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய

    READ MORE
  • தென்காசி மாவட்டம் இன்று உதயம்

    தென்காசி: தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று முதல் உதயமானது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து புதிய மாவட்டமாக கடந்த ஜூலை மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு புதிய ஆட்சியம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தார். இந்நிலையில், தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா இசக்கி மகால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை துவக்கிவைத்தார்.

    READ MORE
  • தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளுர், வேலூர், சேலம், மதுரை திருச்சி, உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பு விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு

    READ MORE
  • 4,001 ஆசிரியர்களுக்கு ‘புரமோஷன்’..!

    சென்னை: தமிழகத்தில் 4,001 ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு இந்த பதவி உயர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட வாரியாக 4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் எனவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களில் 1,500க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு, 17பி பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும்

    READ MORE
  • குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை!

    சென்னை: தமிழகத்தில் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுபாடு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு