சென்னையில் மிக பெரிய ப்ராஜெக்ட்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

சென்னையில் மிக பெரிய ப்ராஜெக்ட்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை ஆர்ஏ புரத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழி அல்லது எட்டு வழி தடத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின்பு மேம்பாலப் பணிகள் நடைபெறும். பணிகள் நிறைவு பெற்ற பின் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றும் கூறினார். முன்னதாக தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்