போலி டாக்டர்கள் கைது

போலி டாக்டர்கள் கைது

ஒசூர்:

ஓசூர் அருகே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே நாட்றம்பாளையம் என்னுமிடத்தில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவக்குழு சார்பில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நாட்றம்பாளையத்தில் இருவர் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததை கண்டறியப்பட்டு அவர்களை போலீசார் உதவியுடன் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இளங்கலை கணிதம் பயின்ற ஒகேனக்கல்லை சேர்ந்த சக்தி வேல் (40) மற்றும் சித்தா பயின்ற பென்னாகரத்தை சேர்ந்த சிவக்குமார் (39) என்பதும், மருத்துவமே படிக்காமல் 5 ஆண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்