தென்காசி:
தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று முதல் உதயமானது.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து புதிய மாவட்டமாக கடந்த ஜூலை மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு புதிய ஆட்சியம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தார்.
இந்நிலையில், தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா இசக்கி மகால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை துவக்கிவைத்தார்.