முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • 25 பைசாவுக்கு பிரியாணி; 5 பைசாவுக்கு சேலை

    வேலூர்: வேலூரில் 25 பைசாவுக்கு பிரியாணியும், வாணியம்பாடியில் 5 மற்றும் 10 பைசாவுக்கு சேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் ஆரணி ரோட்டில் ஆர்.ஆர்.உணவகம் இயங்கி வருகிறது. இதன் புதிய கிளையில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் வகையில் புது வகையான சலுகையை அறிவித்துள்ளனர். வித்தியாசமான இந்த சலுகையானது 25 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் அறிவித்தார். இதனையடுத்து, அந்த ஓட்டல் முன் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே

    READ MORE
  • கஞ்சா விற்ற 4 பேர் கைது

    ஒசூர்: ஒசூரில் கஞ்சா விற்றுவந்த 4 பேர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில், இளைஞர்களை மையமாக வைத்து சமூக விரோதக்கும்பல் சட்டவிரோதமாக கஞ்சாவினை விற்றுவருவதாக ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு இரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களுடன் விற்பனை செய்வதற்காக காத்திருந்த நவாஷ்,பர்கத்,நூர் அகமத்,சுரேஷ் ஆகிய நான்கு பேரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

    READ MORE
  • கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்

    ஓசூர்: கிரு‌‌ஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனபள்ளி, சூளகிரி, தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. முதல்கட்ட தேர்தல் வருகிற 27ம் தேதி தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களுக்கு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் 30ம் தேதி கிரு‌‌ஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 333 ஊராட்சிகள் உள்ளன. இந்த 333 ஊராட்சிகளுக்கு 333 ஊராட்சி தலைவர்கள், 3 ஆயிரத்து

    READ MORE
  • அதிவேக பைக் ரேஸ்..! சென்னையில் 21 பேர் கைது..!!

    சென்னை: சென்னையில் அதிவேகமாக பைக் ஓட்டி ரேஸில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை மடக்கி பிடித்து சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பைக்குகளையும் சென்னை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை சாலையில், பைக் ரேஸை தடுக்க ஏற்கனவே 22 இடங்களில் தடுப்புகளை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை… பிரச்னையை கிளப்பும் பீட்டா..!

    புதுடெல்லி: மாடுகளின் வால்கள் கடிக்கப்படுவதாகவும், மூக்கில் ரத்தம் வடிவதாகவும் ஜல்லிக்கட்டு குறித்து மீண்டும் புதிய பிரச்னையை கிளப்பும் வகையில், பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து, 73 பக்க அறிக்கையை பீட்டா தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்கப்படுவது குறித்து தெரிவித்துள்ளது. பீட்டா அமைப்பின் சார்பில், ஏற்கெனவே ஜல்லிக்கட்டு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கால், சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் வீரியமடைந்து, உலகம் முழுவதும்

    READ MORE
  • குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை நீட்டிப்பு!

    சென்னை: தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கக்கூடாது என்றும், விநியோகிக்க மற்றும் விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதித்திருந்தது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு