குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை நீட்டிப்பு!

குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை நீட்டிப்பு!

சென்னை:
தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு, தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கக்கூடாது என்றும், விநியோகிக்க மற்றும் விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதித்திருந்தது.

இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடையை நீட்டித்து வருகிறது. இந்நிலையில், தற்போது மேலும், ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு இந்தாண்டு மே 23ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்