கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

ஒசூர்:

ஒசூரில் கஞ்சா விற்றுவந்த 4 பேர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில், இளைஞர்களை மையமாக வைத்து சமூக விரோதக்கும்பல் சட்டவிரோதமாக கஞ்சாவினை விற்றுவருவதாக ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு இரகசிய தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களுடன் விற்பனை செய்வதற்காக காத்திருந்த நவாஷ்,பர்கத்,நூர் அகமத்,சுரேஷ் ஆகிய நான்கு பேரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்த ஒரு கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், நவாஷ் என்பவன் இந்த குழுவிற்கு தலைவனாக செயல்பட்டு தெரியவந்தது.

ஓசூரில் கஞ்சா விற்பனையில் எத்தனை பேர் ஈடுபட்டு வருகின்றனர், எங்கிருந்து கஞ்சா கொண்டுவரப்படுகிறது என்கிற விசாரணையை நகர போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்