வேலூர்:
வேலூரில் 25 பைசாவுக்கு பிரியாணியும், வாணியம்பாடியில் 5 மற்றும் 10 பைசாவுக்கு சேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் ஆரணி ரோட்டில் ஆர்.ஆர்.உணவகம் இயங்கி வருகிறது. இதன் புதிய கிளையில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் வகையில் புது வகையான சலுகையை அறிவித்துள்ளனர்.
வித்தியாசமான இந்த சலுகையானது 25 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் அறிவித்தார். இதனையடுத்து, அந்த ஓட்டல் முன் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், வாணியம்பாடி ஜண்டாமேடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் 5 மற்றும் 10 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள சேலைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
அங்கும் 5 பைசா மற்றும் 10 பைசா நாணயங்களை எடுத்துக்கொண்டு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆனால் முதலில் வந்த 100 பேருக்க மட்டுமே சேலைகள் வழங்கப்பட்டது. இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.