சென்னை:
சென்னையில் அதிவேகமாக பைக் ஓட்டி ரேஸில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை மடக்கி பிடித்து சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பைக்குகளையும் சென்னை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை சாலையில், பைக் ரேஸை தடுக்க ஏற்கனவே 22 இடங்களில் தடுப்புகளை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.