முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ரூ.10 லட்சம் கொள்ளை

    ஒசூர்: கிருஷ்ணகிரி அருகே கார் கண்ணாடி உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக தனது காரினை நிறுத்திவிட்டு சஞ்சிவி என்பவர் பத்திர பதிவு செய்ய சென்றுள்ளார். பின்னர் சஞ்சீவி பத்திரபதிவு முடித்துவிட்டு வெளியே வந்து தனது காரில் இருந்த பணத்தை எடுக்க வந்துள்ளார் அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த 10 லட்சம் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக சஞ்சீவி

    READ MORE
  • ”மகா.,வில்  ஜனநாயக படுகொலை” கிருஷ்ணகிரி எம்.பி.,

    ஓசூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது ஜனநாயக படுகொலை என, கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு உள்ளாட்சித்துறையில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்த அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மக்கள் எண்ணத்திற்கு எதிராக செய்யும் சதிவேலை. மகாராஷ்டிரா மாநிலத்தில், அதிகாலை நேரத்தில் கவர்னர் பா.ஜ.,வை ஆட்சியமைக்க வைத்து, பதவி பிரமாணம் செய்து வைத்திருப்பது ஜனநாயக படுகொலை. பொதுத்துறை நிறுவனங்களில் சொத்துகளை தனியாருக்கு விற்பது வேதனை அளிக்கிறது. மக்கள்

    READ MORE
  • கார் -லாரி மோதல்; 3 பேர் பலி

    தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டூனர் ரமேஷ் (40) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சத்தியவாணி (70), என்பவரை மருத்துவ சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அன்பு (50), கவிதா (40), ஆகிய 3 பேரையும் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது தருமபுரியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி

    READ MORE
  • தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

    சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE
  • 8 வழிச்சாலை திட்ட தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு!

    சென்னை: தமிழகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10,000 கோடி செலவில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துவந்த நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்துக்கு தடை விதித்தது. 8 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமை எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம்

    READ MORE
  • ‘‘சிகரெட் நிறுவனங்களை தண்டிக்கணும்’’ ராமதாஸ் பேட்டி!

    சென்னை: சிறார்களை புகைப்பழக்கத்திற்கு அடியாக்கும் சிகரெட் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டங்கள், விதிகளை காற்றில் பறக்கவிட்டு சிறுவர்களை சீரழிக்கும் வகையில், சட்டவிரோத விளம்பரங்களை புகையிலை நிறுவனங்கள் துணிச்சலாக வெளியிடுகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சட்டவிரோத விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், சிகரெட் விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு