தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டூனர் ரமேஷ் (40) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சத்தியவாணி (70), என்பவரை மருத்துவ சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அன்பு (50), கவிதா (40), ஆகிய 3 பேரையும் காரில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது தருமபுரியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி சென்றபோது தொப்பூர் கணவாய் பகுதியில் கார் மீது பின்புறத்தில் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற அன்பு, கவிதா, சத்தியவாணி ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த கார் ஓட்டுனர் ரமேஷை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துகுறித்து தொப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.