ரூ.10 லட்சம் கொள்ளை

ரூ.10 லட்சம் கொள்ளை

ஒசூர்:

கிருஷ்ணகிரி அருகே கார் கண்ணாடி உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக தனது காரினை நிறுத்திவிட்டு சஞ்சிவி என்பவர் பத்திர பதிவு செய்ய சென்றுள்ளார்.

பின்னர் சஞ்சீவி பத்திரபதிவு முடித்துவிட்டு வெளியே வந்து தனது காரில் இருந்த பணத்தை எடுக்க வந்துள்ளார் அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த 10 லட்சம் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக சஞ்சீவி வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் , புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தித்திற்கு வந்த காவல்துறையினர் காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் காரில் இருந்த ரூபாய் 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் பணம் கொள்ளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்