முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • காதலருக்கு கொலை மிரட்டல்

    ஒசூர்: காதல் திருமணம் செய்துக்கொண்டவர்களுக்கு பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம் தம்பதிகள் போலீசில் புகாரளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் எட்வின் பிரியன்(25), எம்பி அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டதாரி பெண் மோனிகா(23). இருவரும் கிறிஸ்தவ மதத்தில் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தும் 3 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மோனிகா, எட்வினை காதலித்து வருவதை அவர்கள் வீட்டில் தெரிவித்தபோது காதலை ஏற்க மறுத்து வேறு ஒரு வரணை

    READ MORE
  • தமிழகத்தில் மிதமான மழை

    சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தல் அடுத் 24 மணி நேரத்துக்கு வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்க, ராமநாதபுரம், தூத்துக்குடி ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.  

    READ MORE
  • மரகத லிங்கத்தை கண்டுபிடிக்க பொன்மாணிக்கவேல்

    ஒசூர்: ஓசூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன மரகத லிங்கத்தை கண்டுபிடிக்கும் வழக்கை பொன்மாணிக்கவேல் ஏற்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே அமைந்துள்ளது. மல்லிகா அர்ஜுன துர்க்க மலைக்கோவில், இந்த கோவிலை வைசலாக்கள் காலத்தில் கட்டப்பட்டு பராமரித்து வருவதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த கோவிலினுள் பழமையான கல்வெட்டுக்கள், சிற்ப்பக்கள், தூண்கள் இன்றும் கம்பீரத்துடன் காட்சியளித்து வருகின்றன அப்போதைய மன்னர்கள் இந்த கோவிலினுள் மரகலிங்கத்தை நிறுவி

    READ MORE
  • அமைச்சர் பதவி கிடைக்குமா? மோடியின் பேச்சால் ஓபிஎஸ் மகன் கலக்கம்..!

    சென்னை: பா.ஜ., கூட்டணியின், நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த புதிய எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்பாதீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உரிய இலாகா வழங்கப்படும் என புதிய எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். இதனால், அந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பப்பட்டது. இந்நிலையில், மோடி பேசிய இந்த உரையால், அதிமுகவினரிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    READ MORE
  • திமுக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு!

    சென்னை: திமுக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை துணைத் தலைவராக கனிமொழியும், கொறடாவாக ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்னர். மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    READ MORE
  • 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

    சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையாலும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு