ஒசூர்:
காதல் திருமணம் செய்துக்கொண்டவர்களுக்கு பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம் தம்பதிகள் போலீசில் புகாரளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் எட்வின் பிரியன்(25), எம்பி அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டதாரி பெண் மோனிகா(23).
இருவரும் கிறிஸ்தவ மதத்தில் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தும் 3 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மோனிகா, எட்வினை காதலித்து வருவதை அவர்கள் வீட்டில் தெரிவித்தபோது காதலை ஏற்க மறுத்து வேறு ஒரு வரணை பார்த்து திருமண ஏற்பாடுகள் நடைப்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மோனிகா, காதலன் எட்வின் பிரியனுன் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறி இன்று ஓசூரில் உள்ள அலுவலகம் ஒன்றில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய காதலர்களில், மோனிகாவின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்தும், கணவனை பிரிந்து வருமாறு கூறிவதாக தெரிவித்து
காதல் திருமணம் செய்துக்கொண்ட இளம் தம்பதிகள் பாதுகாப்புக்கேட்டு ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி அவர்களிடம் தஞ்சமடைந்துள்ளனர்.