முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • உள்ளாட்சி இன்று மாலை புதிய அறிவிப்பு

    சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழங்கு தொடர்ந்தது. இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளி வரும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • ரோஜா உற்பத்தி பாதிப்பு; விலை உயர வாய்ப்பு

    ஒசூர்: ஓசூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ரோஜா உற்ப்பதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளில் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டர்களில் பசுமைக்குடில்கள் அமைத்தும், திறந்தவெளியாகவும் ரோஜா, ஜர்புரா, பிங்க், கார்னேசன் உள்ளிட்ட மலர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஓசூர் பகுதியில் விளையும் மலர்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளநிலையில், ஓசூருக்கு ரோஜாக்களின் நகரம் என்கிற அழகிய பெயருமுண்டு. ஓசூர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக

    READ MORE
  • உள்ளாட்சி தேர்தல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

    புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். இன்று இரவுக்குள் இணையத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE
  • 3வது மொழியாக தமிழ் பயிற்று மொழி..! டுவிட்டை நீக்கினார் முதல்வர்..!!

    சென்னை: நாட்டின் பிற மாநிலங்களில் 3வது மொழியாக தமிழை பயிற்றுவிக்க பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த டுவிட் பதிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், பிற மாநிலங்களில் 3வது விருப்ப பாடமாக தமிழ் மொழியை சேர்க்க வேண்டும். உலகின் பழமையான மொழிக்கு இதுவே சிறந்த சேவையாகும் என பிரதமர் மோடிக்கு தன்னுடைய பதவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது அந்த பதிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார். தேசிய புதிய

    READ MORE
  • தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை அரசாணை நாளை வெளியீடு!

    சென்னை: தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான அரசாணை நாளை வெளியாகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை குறித்த அரசாணை நாளை வெளியிடப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    READ MORE
  • தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

    சென்னை: உள் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு