சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழங்கு தொடர்ந்தது. இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளி வரும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.