முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • 4,001 ஆசிரியர்களுக்கு ‘புரமோஷன்’..!

    சென்னை: தமிழகத்தில் 4,001 ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு இந்த பதவி உயர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட வாரியாக 4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் எனவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களில் 1,500க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு, 17பி பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும்

    READ MORE
  • 14 ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை..!

    சூளகிரி: சூளகிரியில் 14 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னார் பலவதிம்மனப்பள்ளியில் சிறுத்தை ஒன்று, விவசாயின் ஆடுகளை கடித்து குதறிவிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவத்தில், 7 ஆடுகள் பரிதாபமாக பலியானது. மேலும் 7 ஆடுகள் காயங்களுடன் உயிர்தப்பியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    READ MORE
  • முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்..! – ஆசிரியர் தேர்வு வாரியம்

    சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. ஜூன் 8ம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூன் 9ம் தேதி 2ம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த தேர்வுகளில், முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை, தேர்வு அறைக்குள் எடுத்துச்சென்றாலோ தேர்விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு