சூளகிரி:
சூளகிரியில் 14 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னார் பலவதிம்மனப்பள்ளியில் சிறுத்தை ஒன்று, விவசாயின் ஆடுகளை கடித்து குதறிவிட்டு சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில், 7 ஆடுகள் பரிதாபமாக பலியானது. மேலும் 7 ஆடுகள் காயங்களுடன் உயிர்தப்பியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.