முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • விஜயவாடா சென்றார் மு.க.ஸ்டாலின்!

    விஜயவாடா: ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் விஜயவாடா சென்றார். விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் ஆந்திர முதல்வராக்க ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார்.

    READ MORE
  • ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை!

    புதுடெல்லி: ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    READ MORE
  • அதிமுக எம்.பி., வைத்திலிங்கம் முதல்வருடன் சந்திப்பு!

    சென்னை: அதிமுக எம்.பி., வைத்திலிங்கம் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்தித்து பேசினார். மோடி தலைமையிலான அரசு டெல்லியில் நாளை பதவியேற்கிறது. பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு 2 அமைச்சர்கள் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், எம்.பி.,யான வைத்திலிங்கம் அமைச்சர் பதவி கேட்பதாக செய்தி வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பா.ஜ., தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு