முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சண்டையிட்ட எம்.பி. செந்தில்குமார்

    பாப்பிரெட்டிப்பட்டி: தருமபுரி மாவட்டத்தில் சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படாதததைக் கண்டித்து அதிகாரிளுடன் தருமபுரி எம்.பி., செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சேலத்திலிருந்து வேலுருக்கு பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சாலை செல்கிறது. இந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கான ஒப்பந்தமும் விட்டு 7 மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. இது பற்றிய புகார் எம்.பி. செந்தில்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை வரவழைத்து

    READ MORE
  • கீழடிக்கு போனாலே மனசு ராக்கெட்டு போல் பறக்கிறது

    சிவகங்கை: கீழடியில் அமைந்துள்ள அகழ்வாராய்ச்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தான் கீழடியில் நின்றபோது தன் மனம் சந்திரயானைப் போன்று வானம் வரை பறந்து சென்றது போல் உள்ளது. மேலும், தமிழர்கள் பல பகுதிகளில் சிறந்த ஒரு நாகரிகம், பண்பாட்டை கடைபிடித்துள்ளனர். தமிழர்களின் பண்பாடு மற்றும் அதனை பாதுகாப்பது நமது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தென் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறை காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு