சிவகங்கை:
கீழடியில் அமைந்துள்ள அகழ்வாராய்ச்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தான் கீழடியில் நின்றபோது தன் மனம் சந்திரயானைப் போன்று வானம் வரை பறந்து சென்றது போல் உள்ளது.
மேலும், தமிழர்கள் பல பகுதிகளில் சிறந்த ஒரு நாகரிகம், பண்பாட்டை கடைபிடித்துள்ளனர்.
தமிழர்களின் பண்பாடு மற்றும் அதனை பாதுகாப்பது நமது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.