முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பயிற்சி இயந்திரங்கள் தான்

    சென்னை: நாங்குநேரியில் மின்னணு வாக்கு இயந்திரம் மாற்றியது பயிற்சிக்கான இயந்திரங்கள் தான் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் வாக்கு இயந்திரங்கள் மாற்றியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தலை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, நாங்குநேரியில் மின்னணு வாக்கு இயந்திரம் மாற்றியது குறித்து, ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார். மாற்றப்பட்ட இயந்திரம் வாக்குபதிவிற்கானது அல்ல. பயிற்சிக்கான இயந்திரங்கள் தான். அரசியல் கட்சிகளுக்கு

    READ MORE
  • திமுக இளைஞரணி ஆலோசனை

    ஒசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டம் ஒசூரில் நடைபெற்றது. திமுக மாநில இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மாநில அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை சிறப்பாக நடத்துவது குறித்து ஓசூர்- தளி சாலையில் உள்ள சென்னீஸ் மஹாலில் மாவட்ட செயலாளர் தளி. ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பி.முருகன் எம்எல்ஏ, ஓசூர்

    READ MORE
  • இளைஞர்களுக்கு கஞ்சா; ஒருவர் கைது

    ஒசூர்: ஓசூர் அருகே கஞ்சா விற்றுவந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 250 கிராம் எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைப்பெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின்பேரில், கெலமங்கலம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தநிலையில், நேற்று மாலை கஞ்சா விற்பனை செய்துவந்த உன்னிகிருஷ்ணன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்த உன்னிகிருஷ்ணனிடம் விற்பனைக்காக வைத்திருந்த 250

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு