திமுக இளைஞரணி ஆலோசனை

திமுக இளைஞரணி ஆலோசனை

ஒசூர்:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டம் ஒசூரில் நடைபெற்றது.

திமுக மாநில இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மாநில அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை சிறப்பாக நடத்துவது குறித்து ஓசூர்- தளி சாலையில் உள்ள சென்னீஸ் மஹாலில் மாவட்ட செயலாளர் தளி. ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பி.முருகன் எம்எல்ஏ, ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், வீராரெட்டி, மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, முனிராமய்யா, ஒசூர் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் ரகுநாத், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், கெலமங்கலம் பேரூர் பொறுப்பாளர் குமார், விவசாய அணி சிரிதர், இலக்கிய அணி எல்லோராமணி, தொ.மு.ச கோபாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் முனிராஜ், மருத்துவரணி நவீன்குமார், தொண்டரணி சேகர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், ஊராட்சி, வார்டு இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்