முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • முருகனுக்கு 8 நாள் காவல் நீட்டிப்பு

    பெங்களூரு: திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் காவல் 8 நாட்கள் நீட்டித்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி லலிதா ஜூவல்லரி திருட்டு வழக்கு தொடர்பாக முருகனை விசாரிக்க திருச்சி போலீஸ் கமிஷனர் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முருகனை ஏற்கனவே 4 நாள் போலீசார் விசாரணை செய்த நிலையில் மேலும் 8 நாட்கள் காவல் நீட்டித்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    READ MORE
  • வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மலரஞ்சலி

    சூளகிரி: சுதந்திரப்போராளி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில், சூளகிரி பள்ளியில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரப் போராளி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 220ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்தே கவுடா மற்றும் கணேசன், வால்மிகி ஜனசேனா நலச்

    READ MORE
  • கோவை குழந்தைகள் கொலை; தீர்ப்பு தள்ளிவைப்பு

    புதுடெல்லி: கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில் தூக்குத்தண்டனைக்கு எதிரான மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில்  தீர்ப்பு தேதி குறிப்பிடபடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், மனோகரன் தரப்பு வழக்கறிஞர், போலீஸ் காவலில், குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.  அவராக வாக்குமூலம் கொடுக்கவில்லை எனவும், போலீசாரின் கடும் தாக்குதலுக்கு பின்னரே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதை விசாரணை நீதிமன்ற நீதிபதி

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு