ஒசூர்:
ஓசூர் அருகே கஞ்சா விற்றுவந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 250 கிராம் எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைப்பெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
புகாரின்பேரில், கெலமங்கலம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தநிலையில், நேற்று மாலை கஞ்சா விற்பனை செய்துவந்த உன்னிகிருஷ்ணன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்த உன்னிகிருஷ்ணனிடம் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.