முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தமிழகத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி!

    சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும். 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், ஈரோடு மாவட்டம் அந்தியூர்

    READ MORE
  • 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவு!

    சென்னை: தமிழகத்தில் 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள்ள 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம்

    READ MORE
  • பள்ளியில் தீ; விடைத்தாள்கள் நாசம்!

    சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரியில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு விடைத்தாள்கள் கருகி நாசமாயின. சூளகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 9ம் வகுப்பு அறையில் இருந்த பொதுத் தேர்வு விடைத்தாள்கள் தீயில் கருகி நாசமாயின. தீவிபத்து குறித்து தகவலறித்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், அசாம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு