தமிழகத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும். 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும் மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்