பள்ளியில் தீ; விடைத்தாள்கள் நாசம்!

பள்ளியில் தீ; விடைத்தாள்கள் நாசம்!

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரியில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு விடைத்தாள்கள் கருகி நாசமாயின.

சூளகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 9ம் வகுப்பு அறையில் இருந்த பொதுத் தேர்வு விடைத்தாள்கள் தீயில் கருகி நாசமாயின.

தீவிபத்து குறித்து தகவலறித்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், அசாம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்