43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவு!

43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவு!

சென்னை:
தமிழகத்தில் 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள்ள 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் ஒப்புகைச்சீட்டை எண்ணும்போது தெரிந்துவிடும்.
ஒப்புகைச்சீட்டு எண்ணும்போது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்