முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து, குண்டுவெடிப்பில் பலியானோரின் 4 குடும்பங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    READ MORE
  • தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ல் மறுவாக்குப்பதிவு

    சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்: தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, தேனி தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகள், ஈரோடு தொகுதியில ஒரு வாக்குச்சாவடியிலும், வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என

    READ MORE
  • மதுரை அரசு மருத்துவமனையில் பவர் கட், ஜெனரேட்டரும் ரிப்பேர்: ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் உயிரிழப்பு!

    மதுரை அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில், நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பல இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்ததில், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜெனரேட்டர் உடனடியாக இயக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் பழுதடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இந்த

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு