தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ல் மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ல் மறுவாக்குப்பதிவு

சென்னை:

தமிழகத்தில் கடந்த மாதம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்:

தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, தேனி தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகள், ஈரோடு தொகுதியில ஒரு வாக்குச்சாவடியிலும், வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்