முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ”ஆர்.எஸ்.எஸ். போல் செயல்படனும்” – ராமதாஸ்

    வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமைத் தாங்கி பேசினார். பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பேரவையின் தலைவர் வழக்கறிஞர் க.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு கூட்டத்தில், ராமதாஸ் பேசுகையில் “பா.ஜ.க-வுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பக்க பலமாக இருப்பதைப் போன்று, பா.ம.க-வுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை உறுதுணையாக இருக்கவேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி கொடுக்கவேண்டும் என பேசினார்.

    READ MORE
  • ”டிடிவி தினகரன் ஒரு கோழை” – தங்க தமிழ்ச்செல்வன்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். டிடிவி தினகரனுடன் சென்ற 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து 18 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு எதிராக வரவே தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேரை அவர்களின் தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தினார்.

    READ MORE
  • காவல் நிலையத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி.!

    வேலூர் அரசமர பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை 50, பழைய பேருந்தி நிலையத்தில் உள்ள கடையில் பூ வியாபாரம் செய்து வந்தார். காலை வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது: பழைய பேருந்து நிலையத்தில் வைத்திருந்த பூ கடையை பெண் வியாபாரி ஒருவரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறினேன். அந்த கடைக்கு அவரது பெயரில் மாநகராட்சிக்கு வரி செலுத்திவிட்டு

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு