முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பள்ளியின் பால்கனி இடித்தது; 3 மாணவர்கள் காயம்!

    மதுரை: மதுரையில் பள்ளியின் பால்கனி இடிந்து விழுத்ததில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மதுரையில் உள்ள ஆர்யவைஸ்யா மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    READ MORE
  • இரிடியம் மோசடியில் 3 பேர் கைது!

    சேலம்: சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் நகரின் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ஸ்டாலின், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றறை அளித்தார். அதில், சென்னையை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் இரிடியம் இருப்பதாக கூறி தன்னுடன் சேர்த்து, தனது நண்பரிடம் ரூ.50 லட்சம் பணத்தை பறித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சரவணன், சிவகுமார் உள்ளிட்ட

    READ MORE
  • தமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல்!

    சென்னை: தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் எனவும், ஜூலை 8ம் தேதி வேட்புமனுதாக்கலும், வேட்புமனு பரிசீலனை – ஜூலை 9, திரும்பபெற கடைசி நாள் ஜூலை 11ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி காலை 9 மணி முதல்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு