சென்னை:
தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் எனவும், ஜூலை 8ம் தேதி வேட்புமனுதாக்கலும், வேட்புமனு பரிசீலனை – ஜூலை 9, திரும்பபெற கடைசி நாள் ஜூலை 11ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டள்ளது.