இரிடியம் மோசடியில் 3 பேர் கைது!

இரிடியம் மோசடியில் 3 பேர் கைது!

சேலம்:

சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் நகரின் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ஸ்டாலின், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றறை அளித்தார். அதில், சென்னையை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் இரிடியம் இருப்பதாக கூறி தன்னுடன் சேர்த்து, தனது நண்பரிடம் ரூ.50 லட்சம் பணத்தை பறித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சரவணன், சிவகுமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்