காவல் நிலையத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி.!

காவல் நிலையத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி.!

வேலூர் அரசமர பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை 50, பழைய பேருந்தி நிலையத்தில் உள்ள கடையில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

காலை வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது: பழைய பேருந்து நிலையத்தில் வைத்திருந்த பூ கடையை பெண் வியாபாரி ஒருவரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறினேன்.

அந்த கடைக்கு அவரது பெயரில் மாநகராட்சிக்கு வரி செலுத்திவிட்டு கடைக்கு உரிமை கொண்டாடினார்.

இது பற்றி மாநகராட்சி அலுவலகம், வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் என்னை அலட்சியப்படுத்தினர்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த நான் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றேன் என்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்