”ஆர்.எஸ்.எஸ். போல் செயல்படனும்” – ராமதாஸ்

”ஆர்.எஸ்.எஸ். போல் செயல்படனும்” – ராமதாஸ்

வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமைத் தாங்கி பேசினார்.

பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பேரவையின் தலைவர் வழக்கறிஞர் க.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு கூட்டத்தில், ராமதாஸ் பேசுகையில் “பா.ஜ.க-வுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பக்க பலமாக இருப்பதைப் போன்று, பா.ம.க-வுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை உறுதுணையாக இருக்கவேண்டும்.

வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி கொடுக்கவேண்டும் என பேசினார்.

இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்