முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ரஜினி வராவிட்டால் அவருடைய வாக்குகள் எல்லாம் கமலுக்கே… மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி ஆருடம்..!

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்துக்காக தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 50 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெரிய வெற்றியை பெற்று கமல் ஹாசன் முதல்வராகப் பதவியேற்கும் வாய்ப்பு உள்ளது. டாஸ்மாக் விற்றால்தான் அரசுக்கு வருமானம் என்ற நிலையில் உள்ள அதிமுக அரசை அகற்றுவதே மக்கள் நீதி மய்யத்தின் பணி. நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக

    READ MORE
  • நாட்டிலேயே சிறப்பான ஆட்சி தரும் மாநிலம்… முதலிடம் நோக்கி செல்லும் தமிழகம்..!

    இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யப்படும் மாநிலலங்கள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கேரள மாநிலம் 1.388 குறியீட்டுப் புள்ளியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் 0.912 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆந்திரா (0.531), கர்நாடகம் (0.468) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த

    READ MORE
  • தமிழகத்தில் அரையாண்டு தேர்வு இரத்து

    கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. எப்போது பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான

    READ MORE
  • ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவக் கலந்தாய்வு இல்லை: தமிழக அரசு

    தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில், எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை தற்போதைக்கு அறிவிக்கப்போவதில்லை என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது. தமிழக அரசு

    READ MORE
  • முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பஸ் ஸ்டாப்பை முன்கூட்டியே அறிவிக்க தானியங்கி ஒலிபெருக்கி :தமிழக போக்குவரத்துக்கழகம் திட்டம்

    தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, பஸ்ஸ்டாப் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் தானியங்கி ஒலிபெருக்கி வசதியினை ஏற்படுத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது இதற்கான பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழங்களுக்கு சொந்தமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக சென்னையில் மாநகரப் பேருந்துகள்-3,439, நகரப்பேருந்துகள்-6,636, புறநகர் பேருந்துகள்-7,842, மலைப்பகுதி பேருந்துகள்-497, விரைவுப்பேருந்துகள் மாநிலத்திற்குள்-615, வெளிமாநிலங்களுக்கு-467 என மொத்தம்

    READ MORE
  • முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த டிடிவி தினகரன்

    திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதிப்பட்டதாகவும் அந்த ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள டி.டி.வி தினகரன், “திருப்பூர் அரசு மருத்துவமனையில்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு