முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘‘குடிநீர் இல்லையென்றால்… அங்கீகாரம் ரத்து’’ – செங்கோட்டையன்

    சென்னை: தனியார் பள்ளிகளில் குடிநீர் இல்லை என கூறினால் அந்தப்பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர் பிரச்சனை நிலவிவருகிறது. சென்னையில் பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில் குடிநீர் பிரச்சனையால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில பள்ளிகள் அரை நாள் விடுமுறைகளையும் அளித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுபாடு உள்ளது என கூறினால் அந்த

    READ MORE
  • ஒசூர் அருகே செயின் பறிப்பு..! தம்பதியினர் படுகாயம்..!!

    ஒசூர்: ஒசூர் அருகே பைக்கில் சென்ற தம்பதியினரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தம்பதியினர் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இன்னொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த பெண்ணின் கழுத்திலிருந்த 5 பவுன் செயினை அறுத்துக்கொண்டு தப்பியோடினர். கணவன் மனைவி இரண்டு பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் விழுந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    READ MORE
  • பள்ளிகளில் தூய்மை வாசகங்கள் எழுத உத்தரவு!

    சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூகெசை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குனரகம், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சுவர்களில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் எனவும், சுவர், கழிப்பறைகளில், அசுத்தத்தை அகற்றி நோயை ஒழியுங்கள், சாப்பிடும் முன், கழிவறையை பயன்படுத்திய பின் கைகளை சோப்பால் கழுவவும் போன்ற தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு