ஒசூர்:
ஒசூர் அருகே பைக்கில் சென்ற தம்பதியினரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தம்பதியினர் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இன்னொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த பெண்ணின் கழுத்திலிருந்த 5 பவுன் செயினை அறுத்துக்கொண்டு தப்பியோடினர்.
கணவன் மனைவி இரண்டு பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் விழுந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.