பள்ளிகளில் தூய்மை வாசகங்கள் எழுத உத்தரவு!

பள்ளிகளில் தூய்மை வாசகங்கள் எழுத உத்தரவு!

சென்னை:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூகெசை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில திட்ட இயக்குனரகம், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சுவர்களில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் எனவும், சுவர், கழிப்பறைகளில், அசுத்தத்தை அகற்றி நோயை ஒழியுங்கள், சாப்பிடும் முன், கழிவறையை பயன்படுத்திய பின் கைகளை சோப்பால் கழுவவும் போன்ற தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாசகங்கள் பச்சை நிறத்தில் பெயின்ட் அடித்து, வெள்ளை நிறத்தில் எழுத்துக்கள் எழுத வேண்டும் எனவும், இதற்கான செலவுகளள் அனைத்தும் அரசு சார்பில் வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்