லண்டன்:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி தடை விதித்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே மோசமான நிலைக்கு ஜிம்பாப்வே அணி தள்ளப்பட்டது. இதற்கு காரணம் அந்நாட்டு அரசியில் தலையீடுதான் காரணம் என கூறிப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை தேர்வு செய்திருந்தது.
இந்த அரசியல் தலையீடு குறித்து லண்டனில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கிரிக்கெட் வாரியத்தில் அரசியில் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை விதிக்க ஐசிசி முடிவுசெய்துள்ளது.