புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 300க்கும் மேற்பட்ட சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர். 40 டெஸ்ட் போட்டிகள் 58 கிரிக்ªட் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் மீண்டு வந்து சாதனை படைத்தவர் ஆவார். இத்தனை பெருமைக்குரிய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தற்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.