தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் ஏறி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்ததுள்ளனர்.
தூத்தக்குடி ஆயுதப்படை வளாகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது, ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்ற மூன்று இளைஞர்கள் ஏறி டிக்டாக் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை வைரலாக்கியம் உள்ளனர்.
தமிழக காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை உணர்த்த வேண்டி, டிக்டாக்கில் ஈடபட்ட ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்ற மூன்று இளைஞர்களுக்கும் மார்க்கெட் சிக்னலில் 8 மணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணியை காவல் துறை தண்டனை வழங்கியது.