ஏரியை சுத்தப்படுத்திய இளைஞர்கள்

ஏரியை சுத்தப்படுத்திய இளைஞர்கள்

ஒசூர்:

ஒசூரில் ரோட்டரி கிளப் சார்பில் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்காவில் உள்ள பெரிய ஏரியான சந்திராம்பிகை ஏரி சுற்றிலும் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை ரோட்டரி சங்கம் சார்பில் இளைஞர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஏரி முழுவதும் உள்ள குப்பைகளை சேகரித்து மக்காத குப்பைகளை மாநகராட்சி வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

விடுமுறை நாட்களில் இளைஞர் பலவிதமாக ஓய்வை எடுத்தும், சந்தோஷமான முறையில் அனுபவிக்கும் இந்த சமூகத்தில், இளைஞர்கள் சமுதாயத்தின் மீது கொண்ட இதுப்போன்ற அக்கறையை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்