இளம் வயது ஊராட்சிமன்ற தலைவர்

இளம் வயது ஊராட்சிமன்ற தலைவர்

கிருஷ்ணகிரி:

உள்ளாட்சி தேர்தலில் இளம் வயது ஊராட்சி மன்ற தலைவராக சந்தியா ராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயக்கன்தொட்டி கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயதான சந்தியா ராணி வெற்றிபெற்றுள்ளார்.

இவர், பி.பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். இளம் வயது ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெருமை சந்தியா ராணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்