கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ராஜஸ்தான்:
உறவினர்களுடன் கோயிலுக்கு சென்ற இளம் பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது உறவினர்களுடன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த 3 பேர் அவர்களை வழி மறித்து, இளம்பெண்ணின் உறவினரை தாக்கினர்.

இதனால் பயத்தில் ஆளுக்கு ஒரு திசையில் ஓடினர். இதில் இளம் பெண்ணை மட்டும் அடித்து தூக்கி சென்றனர்.

ஆளில்லாத இடத்தில் அந்த 3 பேரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில், தப்பி ஓடிய அப்பெண்ணின் உறவினர், மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

ஒரு கடைக்காரர் மட்டும் பெண்ணை கடத்தி சென்ற இடத்திற்கு சென்றார். அப்போது அவரை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதனையடுத்து அப்பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தார். இதன் பின்னர் நடந்த சம்பவத்தை போலீசில் புகாராக தெரிவித்தனர்.

புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்