இறந்து 20 நிமிடத்தில் உயிருடன் வந்த இளைஞன்!

இறந்து 20 நிமிடத்தில் உயிருடன் வந்த இளைஞன்!

மிக்சிகன்:

அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 20 நிமிடத்தில் இளைஞர் ஒருவர் உயிருடன் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகனின் லிவோனியாவைச் சேர்ந்த மைக்கேல் ட்ரூட் என்ற இளைஞர், ஏணியில் ஏறுப்போது மின்சார கம்பியில் சிக்கியுள்ளார். அப்போது ஷாக் அடித்து உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அந்த இளைஞரின் இதய துடிப்பு நின்றுவிட்டதாகவும், உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் உயிர் காக்கும் கருவிகளை அகற்றினர்.

இதனையடுத்து, 20 நிமிடங்களுக்குப் பின் திடீரென மைக்கேலுக்கு இதயத்தில் துடிப்பு வந்தது. அப்போது அவர் படுக்கவைக்கப்பட்டிருந்த கட்டிலும் குலுங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிசயமாக மைக்கேலின், இதயம், மூளை செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஷாக் அடித்த பாதிப்பில் பாதங்கள் தான் மறத்துப் போயிருந்ததாகவும் கூறினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்