சென்னை:
சென்னையிலிருந்து மன்னார்குடி சென்ற அரசுப் பேருந்தில் இளம் பெண் ஒருவருக்கு நடத்துநர் ராஜு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் மன்னார்குடி போவதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இரவு நேரம் என்பதால் பெண் அயர்ந்து தூங்கியுள்ளார்.
அப்போது இளம்பெண்ணிடம் நடத்துநர் ராஜு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர் மீது ஏற்கெனவே பல புகார்கள் இருந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மீண்டும் புகார் வந்துள்ளதால் போக்குவரத்து கழகம் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.