ஓமலூர்:
ஓமலூர் அருகே ரயில் வரும்போது தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓமலூர் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த போது, பைக்கில் வந்த இளைஞர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சிக்கிக்கொண்டார்.
இதனைக் கவனித்து, சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.